சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், கில் போன்ற இளம் வீரருக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பை கொடுக்கும் போது அவர் எவ்வளவு திறமை வாய்ந்த வீரராக இருப்பார் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும் என சுரேஷ் ரெய்னா தெரிவித்தார்.