Also Watch
Read this
By: Manigandan Raja

கர்நாடகாவை தொடர்ந்து, ஆந்திராவிலும் சமூக வலைதளங்களை பயன்படுத்த சிறார்களுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அடுத்த 90 நாட்களுக்குள் 13 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடை விதிக்கப்படும் என்றும் ஆந்திர சட்டப்பேரவையில், முதலமைச்சர் சந்திரபாபு அறிவித்து உள்ளார்.

சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை
ஆந்திர மாநிலத்தில், 13 வயதுக்கு உட்பட்ட சிறார்கள், சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படும் என்று மாநில முதல்வர் கூறியுள்ளார்.
சட்டப் பேரவையில் உரையாற்றிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, 13 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்படும் என்றும், அடுத்த 90 நாள்களில் இந்த உத்தரவு அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

16 வயது வரை
இந்த தடையை 13 முதல் 16 வயது உடையவர்களுக்கும் நீட்டிப்பது குறித்து அரசு ஆலோசித்து முடிவெடுக்கும் என்றும் சந்திரபாபு தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில், 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுவதாக, மாநில முதல்வர் சித்தராமையா சட்டப்பேரவையில் அறிவித்தார். இவ்வாறு, சிறார்களின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் மாநிலங்கள் அதிரடி முடிவை வெளியிட்டிருப்பது கவனம் பெற்று உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved