Also Watch
Read this
By: Web Team

கர்நாடக மாநிலம் உடுப்பி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
ஆற்றின் கரையோரப் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளநீர் சூழ்ந்ததால் மக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
தாழ்வான பகுதிகளில் இருந்த மக்களை மீட்பு படையினர் படகுகள் மூலம் மீட்டு பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு சென்றனர்.
ஆற்றின் கரையோரப் பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved