எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டேவிட் லேமி ஆதரவு தெரிவித்தார். இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டேவிட் லேமி, பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது, பஹல்காம் தாக்குதல் தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.