பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளம் இந்தியாவில் முடக்கப்பட்டது. இந்தியாவில் பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ கணக்கைத் தடுக்குமாறு சமூக ஊடக தளமான X-ஐ மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கோரியதன் அடிப்படையில் எக்ஸ் பக்கத்தை முடக்கப்பட்டுள்ளது. இந்த பயங்கரவாத தாக்குலுக்கு லஷ்கர் இ தொய்பாவின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக 5 அதிரடி முடிவுகளை மத்திய அரசு எடுத்துள்ளது.