மோசமான வானிலை காரணமாக ஆக்சியம் 4 திட்டம் ஒருநாள் ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. நாசா மற்றும் 'இஸ்ரோ' இணைந்து, ஆக்ஸியம் 4 என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்ப உள்ளது. இதில் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட அமெரிக்கா, ஹங்கேரி, போலந்து நாடுகளைச் சேர்ந்த நான்கு பேர் செல்ல உள்ளனர். புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன் 9 ராக்கெட் மூலமாக இக்குழு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இன்று புறப்பட இருந்த நிலையில், மோசமான வானிலையால் புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.