கர்நாடகாவின் கோலார் மாவட்டம் தாசரஹோசஹள்ளியில் அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். இந்த மையம் பழுதடைந்த நிலையில் உள்ளதாக பலமுறை கூறியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டும் பொதுமக்கள், இனியாவது அங்கன்வாடி கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.