Also Watch
Read this

துபாயில் சிக்கி இருந்த நடிகர் அஜித்குமார், சென்னை திரும்பி உள்ளார்.

கார் ரேசில் கவனம்
நடிகர் அஜித்குமார், கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கார் பந்தயங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக, அவர் துபாயில் தான், தங்கி இருந்தார். அவரை பல பிரபலங்கள் நேரில் சென்று சந்தித்த புகைப்படங்களும் அடிக்கடி வைரல் ஆகி வந்தன.

போர் பதற்றம்
இஸ்ரேல் - ஈரான் இடையே போர் வெடித்த நிலையில், துபாய் உள்ளிட்ட பல இடங்களிலும் ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால், தாயகம் திரும்ப முடியாமல் அஜித்குமார் அங்கேயே இருந்தார்.

சென்னையில் அஜித்குமார்
இந்த சூழ்நிலையில், நடிகர் அஜித்குமார், இன்று மார்ச் 10ஆம் தேதி, சென்னைக்கு திரும்பி உள்ளார். விமானத்தில் சென்னை வந்திறங்கிய நிலையில் காரில் லக்கேஜ்களை ஏற்றி, அஜித் குமார் கிளம்பி செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved