திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை சமந்தா மற்றும் நடிகை கயாடு லோஹர் தனித்தனியே சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கோவிலுக்கு வந்த இரு நடிகைகளையும், திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று சாமி தரிசனத்திற்கான ஏற்பாடுகளை செய்தனர். தரிசனத்துக்கு பின் இருவருக்கும் தேவஸ்தான் அதிகாரிகள் தீர்த்தப் பிரசாதம் வழங்கினர். பின்னர் கோவிலுக்கு வந்த பக்தர்கள் நடிகைகளுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.