உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள தானிபூர் விமானதளத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சிறிய ரக விமானம், ஓடுபாதையில் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்து சுற்றுச்சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதில் விமானத்தின் முன்பகுதியும், இறக்கையும் முற்றிலும் சேதமடைந்த நிலையில், அதனை இயக்கிய பயிற்சி விமானி பார்வ் ஜெயின், நல்வாய்ப்பாக காயம் ஏதுமின்றி உயிர்தப்பினார்.