ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு உதவியதாக கைது செய்யப்பட்ட இளைஞர் ஆற்றில் குதித்து தப்பியதாக கூறப்படும் வீடியோ வெளியாகி உள்ளது . பயங்கரவாதிகளுக்கு உணவு மற்றும் தங்குமிடம் வழங்கியதாக 23 வயதான இமிதியாஸ் அகமது மக்ரோ என்பவரை கைது செய்தனர். இதனையடுத்து பயங்கரவாதிகள் மறைந்திருந்த இடத்தை அடையாளம் காண்பிக்க சென்ற போது இளைஞர் ஆற்றில் குதித்து தப்பித்ததாக சொல்லப்படும் நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.