Also Watch
Read this
By: Manigandan Raja

தகராறில் கைகலப்பு :
இந்த நிலையில் நேற்று இரவு 12 மணி அளவில் பிரீ பையர் கேம் மாணவர்கள் விளையாடி உள்ளனர் அப்பொழுது அதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கல்லூரி மாணவர்கள் மாறி மாறி தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது இதில் ஒரு தரப்பு மாணவர்களுக்கு ஆதரவாக வெளியில் இருந்து ஒரு சில நபர்கள் உள்ளே சென்று கல்லூரி மாணவர்களை தாக்கியுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த அஸ்தம்பட்டி காவல்துறையினர் அரசு விடுதிக்கு சென்று மோதலில் ஈடுபட்டவர்களை தடுத்துள்ளனர் தொடர்ந்து ஐந்துக்கு மேற்பட்ட செல்போன்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் .
இந்த விடுதியில் காப்பாளர் எப்பொழுதும் இருப்பதில்லை அதே போல எந்த ஒரு பாதுகாப்பு கட்டுப்பாடும் இல்லை யார் வேண்டுமானாலும் உள்ளே செல்லலாம் என்ற ஒரு நிலை உள்ளதால் இது போன்ற மோதல் ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து இந்த மோதல் குறித்து அஸ்தம்பட்டிஉதவி காவல் ஆணையாளர் அஸ்வினி தலைமையிலான காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் பிரீ பையர் கேம் விளையாட்டில் அரசு விடுதியில் மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதே விடுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே போல மோதல் ஏற்பட்டு காப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் தற்பொழுது புதிதாக வந்துள்ள விடுதி காப்பாளரும் பணிக்கு வராமல் இருப்பதுமேலும் மேலும் மோதல் ஏற்படுவதற்கான சூழலை உருவாக்கி வருவதாகவும் மாணவர்கள் மத்தியில் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.
மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் ஜெயக்குமார் இந்த மோதல் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved