பாகிஸ்தானுடனான சர்வதேச எல்லையிலும் பதற்றம் நிலவி வரும் நிலையில், இராணுவ, விமானப்படை குறித்த தகவல்கள் மற்றும் புகைப்படங்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்டதாக பஞ்சாபில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமிர்தசரஸில் உள்ள ராணுவ கன்டோன்மென்ட் பகுதிகள் மற்றும் விமானப்படை தளங்களின் முக்கிய தகவல்களை பாலக் ஷெர் மற்றும் சூரஜ் மாசி ஆகிய இருவரும் கசியவிட்டதாக தெரிய வந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில் பாகிஸ்தான் உளவுத்துறை செயல்பாட்டாளர்களுடன் அவர்கள் இருவரும் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இருவரும் கைது செய்யப்பட்டு அமிர்தசரஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.