Also Watch
Read this
By: Web Team

மேலும் மூன்று அப்பாச்சி AH-64 தாக்குதல் ஹெலிகாப்டர்கள் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டதை தொடர்ந்து மொத்தம் ஆறு ஹெலிகாப்டர்களுடன் அப்பாச்சி படையணி முழுமை பெற்றுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த ஆறு அப்பாச்சி ஹெலிகாப்டர்களும் ராணுவ விமான ஸ்குவட்ரனாக உருவாக்கப்பட்டு, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நிலை நிறுத்தப்படும். அமெரிக்காவில் இருந்து ஆன்டனோவ் என்ற பிரம்மாண்ட விமானத்தில் இந்த அப்பாச்சி விமானங்கள் வந்த தன் முதல் படங்களை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.பாகிஸ்தானை ஒட்டியுள்ள மேற்கு எல்லை மற்றும் பாலைவனப் பகுதிகளில் இந்திய ராணுவத்தின் கண்காணிப்பு மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் மிகவும் உதவி கரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ((போயிங் நிறுவனத்தின் அப்பாச்சி ஹெலிகாப்டர்களில் முதல் மூன்று ஹெலிகாப்டர்கள் கடந்த ஜூலை மாதம் இந்தியா வந்தாலும், எஞ்சியவை வருவதில் கால தாமதம் ஏற்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved