தங்க நகையை அடமானம் வைப்பதில் மேலும் 9 புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்து, ரிசர்வ் வங்கி சாமானியர்களின் தலையில் இடியை இறக்கி இருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்த அவரது எக்ஸ் பதிவில், தங்க நகையை அடமானம் வைக்கும் போது நகையின் மதிப்பில் முன்பை விட 5 சதவீதம் குறைத்து, 75 சதவீதம் தான் கடன் வழங்கப்படும் என்ற புதிய விதிமுறை, அவசர தேவைக்காக வங்கிகளை நாடி வரும் மக்களை நேரடியாகப் பாதிக்கும் என்று கூறியுள்ளார். மேலும் அவசரம் என்று வரும் மக்களை அத்தியாவசியமற்ற விவரங்களையும், ஆதாரங்களையும் கேட்டு அலைக்கழிக்கும் இந்த புதிய நடைமுறையை மத்திய ரிசர்வ் வங்கி உடனடியாக கைவிட அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.