பட்டாசுகள் வெடித்து சிதறின : ஆந்திராவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்தனர். காக்கிநாடா மாவட்டம் வேட்டப்பாளையம் பகுதியில் உள்ள சூர்யஸ்ரீ என்கிற பட்டாசு தொழிற்சாலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு ஆலையில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் முழுவதுமாக வெடித்து சிதறின. இந்த விபத்தில், ஆலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் 20 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர் மேலும், கட்டட இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தை பார்வையிட்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, உயிரிழந்தோரின் குடும்பத்தினர் தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளர். Related Link விமானங்கள் தற்காலிகமாக ரத்து