Also Watch
Read this
By: Manigandan Raja

கப்பல் அழிக்கப்பட்டது :
இந்திய பெருங்கடலில் ஈரானின் போர்க்கப்பல் அமெரிக்காவால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டது விரும்பத்தகாத நிகழ்வு என தெரிவித்துள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், மனிதாபிமான அடிப்படையில் ஈரானின் மூன்றாவது கப்பலுக்கு கொச்சியில் அடைக்கலம் அளித்துள்ளதாக கூறினார். டெல்லியில் நடக்கும் ரெய்சானா கருத்தரங்கில் இதை அவர் தெரிவித்தார்.
கடற்படை பயிற்சிக்கு வந்த ஈரானின் கப்பல்களில் IRIS Dena என்ற கப்பலை இலங்கையின் காலி துறைமுகத்திற்கு அருகே வைத்து அமெரிக்கா தாக்கி அழித்ததில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இரண்டாவது கப்பலுக்கு இலங்கை அரசு அடைக்கலம் அளித்துள்ள நிலையில், மூன்றாவது கப்பல் கொச்சியில் நங்கூரமிடப்பட்டு அதில் இருந்த வீரர்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved