Also Watch
Read this
By: Web Team

பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் நடந்த பல்வேறு தாக்குதல்களில் தொடர்புடைய இவன், தேடப்படும் பயங்கரவாதிகளில் முக்கியமானவன்.
இவனை, இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில், தங்கள் நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் கூறி வருகிறது. இந்த சூழலில்தான், மசூத் அசார் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதுங்கி இருக்கும் இடத்தை இந்திய உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது.
கில்கிட்- பால்டிஸ்தான் பகுதியில் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆபரேஷன் சிந்தூரில் இவனது தலைமை முகாம் தாக்கப்பட்டதில், இவனது குடும்பத்தினர் 10 பேர் பலியானார்கள். இவன் மட்டும் தப்பி விட்டான்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved