Also Watch
Read this
Posted on: May 05, 2025 09:42 AM
By: Admin News Tamil

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படையினர், பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் மறைவிடங்களை கண்டுபிடித்து அதி சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.
பூஞ்ச் மாவட்டத்தின் சூரன்கோட் வனப்பகுதியில் இந்திய ராணுவமும், ஜம்மு காஷ்மீர் போலீசாரும் சேர்ந்து தேடுதல் வேட்டை நடத்தினர்.
இந்த தேடுதல் வேட்டையின் போது மூன்று டிபன் பாக்ஸ்கள் மற்றும் இரண்டு பக்கெட்டுகளில் வைக்கப்பட்டிருந்த அதிசக்தி வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டது.
பயங்கரவாதிகள் தொலைத்தொடர்புக்கு பயன்படுத்தும் உபகரணங்களும் கண்டெடுக்கப்பட்டது.
காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் அதிரடியாக சோதனை நடத்தி வரும் பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் அமைத்த பல தங்குமிடங்களையும் அழித்து ஒழித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved