ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் 7 ஆவது நாளாக அத்து மீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் சார்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. பஹல்காமில் நடத்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான பல அதிரடி முடிவுகளை இந்தியா எடுத்துள்ள நிலையில், காஷ்மீரின் குப்வாரா, உரி, அக்னூர் பகுதிகளில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டருகே பாகிஸ்தான் ராணுவம் 7 ஆவது நாளாக அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்து வரும் நிலையில், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.