நமது இரண்டு நாடுகளும் இஸ்லாமிய நாடுகள் என்பதால், இந்திய எம்பிக்கள் குழுவின் நிகழ்ச்சிகளை ரத்து செய்யக்கூறிய பாகிஸ்தானின் கோரிக்கையை மலேசியா நிராகரித்து விட்டது. சஞ்சய் ஜா தலைமையிலான இந்திய எம்பிக்கள் குழு மலேசியாவுக்கு சென்றுள்ள நிலையில், அங்குள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மலேசிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு, இந்திய குழுவினரின் ஆபரேஷன் சிந்தூர் பற்றிய விளக்க கூட்டங்களை ரத்து செய்யுமாறு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதை நிராகரித்த மலேசிய அரசு, இந்திய குழுவினரின் திட்டமிட்ட 10 நிகழ்ச்சிகளும் எந்த பாதிப்பும் இன்றி நடக்கும் என தெரிவித்து பாகிஸ்தானுக்கு குட்டு வைத்துள்ளது.