நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் அரசமைப்புச் சட்டத்திற்கு இணக்கமானவையாகவே கருதப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பிஆர் கவாய் தெரிவித்தார். வக்பு திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்கு விசாரணையின் போது இதனை தெரிவித்த அவர், வலுவான காரணங்கள் ஏதும் இல்லாவிட்டால் அதில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்றும் கூறினார்.