Also Watch
Read this
By: Web Team

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தார் என கடந்த மே மாதம் கைது செய்யப்பட்ட யுடியூபர் ஜோதி மல்ஹோத்ரா, கேரள அரசின் அழைப்பின் பேரில் விளம்பர தூதராக தங்களது மாநிலத்திற்கு வர வில்லை என சுற்றுலாத் துறை அமைச்சர் முஹம்மது ரியாஸ் விளக்கம் அளித்துள்ளார்.
கேரளாவில் சுற்றுலாத் துறையை வளர்க்கும் திட்டத்தின் கீழ் ஜோதி மல்ஹோத்ரா மாநில அரசால் வரவழைக்கப்பட்டார் என பாஜக உள்ளிட்ட கட்சிகள் புகார் தெரிவித்து அதற்கான RTI ஆதாரங்களையும் வெளியிட்டன.
இதை மறுத்துள்ள சுற்றுலாத் துறை அமைச்சர் முஹம்மது ரியாஸ், ஜோதி மீது எந்த புகாரும் பதிவாகாத நிலையில், கேரள சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திடம் ஒப்பந்தம் பெற்ற விளம்பர ஏஜன்சி அவரை கேரளாவுக்கு வரவழைத்த தாகவும், அதில் மாநில அரசுக்கு எந்த பங்கும் கிடையாது எனவும் கூறியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved