Also Watch
Read this
By: Web Team

காசாவில் இஸ்ரேலின் காட்டுமிராண்டித் தனமான தாக்குதலில் அன்றாடம் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை கண்டிக்க திராணியில்லாமல் இருக்கும் மோடி அரசின் மவுனம் வெட்க கேடானது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமது எக்ஸ் பக்கத்தில் இதை தெரிவித்துள்ள அவர், இஸ்ரேல் நடத்தும் இன படுகொலையில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டி விட்டதை சுட்டிக்காட்டி உள்ளார்.
இவர்களில் சுமார் 20 ஆயிரம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகளை எனவும், லட்சக்கணக்கான அப்பாவிகள் பசிபட்டினியால் வாடுவதாகவும் பிரியங்கா குறிப்பிட்டுள்ளார்.
இதை கண்டு கொள்ளாமல் இந்திய அரசு அமைதியாக கடப்பது, இஸ்ரேலின் யூத அரசு நடத்தும் இனப்படுகொலை குற்றத்திற்கு சமமானது எனவும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved