Also Watch
Read this
By: Web Team

இந்தியாவுக்கு ஒரு ரபேல் போர் விமான இழப்பு ஏற்பட்டாலும், அது ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானின் தாக்குலால் ஏற்பட்ட இழப்பு அல்ல என ரபேல் தயாரிப்பாளரான தஸ்ஸோ ஏவியேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அசாதாரணாமான உயரத்தில் அதாவது 12 ஆயிரம் மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் பயிற்சிக்காக பறந்த போது இந்த ரபேல் விமானத்தில் தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டு அது விபத்தில் சிக்கியதாக தஸ்ஸோ நிறுவன தலைவர் எரிக் டிராவியர் தெரிவித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூரின் போது இந்தியாவின் ரபேல் உள்ளிட்ட ஆறு போர் விமானங்களை சுட்டுத் தள்ளினோம் என பாகிஸ்தான் தொடர்ந்து கூறிவருவது அப்பட்டமான பொய் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவலை பிரஞ்சு ஏவியேஷன் இணையதளமான ஆவியோண் டி ஷாஸ் தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved