அரசியல் விளையாட்டை ஆட வேண்டாம் : பா.ஜ.க. சொல்வதைக் கேட்டு தேர்தல் நேரத்தில் அரசியல் விளையாட்டை ஆட வேண்டாம் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு பதிலளித்துள்ளார். மேற்குவங்கத்தில் குடியரசுத் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சியின் இடம் மாற்றப்பட்டதோடு, அவரை வரவேற்கவும் ஆளும்கட்சியினர் யாரும் வரவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அவர், மாநாட்டுக்கு வரவேண்டிய சிலர் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், சந்தல் பழங்குடியினர் ஒற்றுமையாக இருக்க சிலர் விரும்பவில்லை எனவும் பேசினார். இதற்கு பதிலளித்து பேசிய மம்தா பானர்ஜி, பழங்குடியினருக்கு எதிராக வன்முறைகள் நடந்தபோது ஏன் போராடவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார். Related Link "இந்தியாவின் வளர்ச்சியை இந்தியாவே தீர்மானிக்கும்"