Also Watch
Read this
By: Web Team

ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் ரயில்வேயில் வேலை வாங்கித் தர ஏழை மக்களிடம் இருந்து பணம் மற்றும் நிலங்களை சுரண்டியதாக நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.
டெல்லி ரவுஸ் அவென்யூ நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே அமர்வில் நடந்த விசாரணையில், 2004 முதல் 2009 வரை லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, சிலரை பணியில் அமர்த்த நிலங்களை லஞ்சமாக பெற்று தனது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் பதிவு செய்ததாக சிபிஐ குற்றம் சாட்டியது.
மேலும் குரூப் டி தேர்வுக்கு ஒரே நாளில் ஒரே மாநிலத்தில் இருந்து இவ்வளவு நபர்களை எவ்வாறு தேர்ச்சி பெறமுடியும் என்றும் கேள்வி எழுப்பியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved