Also Watch
Read this
Posted on: Jan 20, 2026 10:38 AM
By: Manigandan Raja

ஐக்கிய அரபு அமீரகத்திடமிருந்து ஆண்டுதோறும் 5 லட்சம் மெட்ரிக் டன் திரவ இயற்கை எரிவாயு கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இந்தியாவுக்கு வருகை தந்த ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் ஸயத் அல் நயன், பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒரே காரில் பயணித்தார்.
அப்போது, இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில், பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. குறிப்பாக, 2032-க்குள் இருநாட்டு வர்த்தகத்தை 200 கோடி டாலர் என்ற அளவிற்கு உயர்த்த இலக்கு நிர்ணயிக்கவும் இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்தன.
இதையும் படியுங்கள் : "அதிகார குவிப்பை விரும்பும் பாஜக, ஆர்எஸ்எஸ்"
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved