Also Watch
Read this
Posted on: Jun 30, 2025 11:56 AM
By: Web Team

பசுமை எரிசக்தி திட்டங்கள் வாயிலாக 15 புள்ளி 53 ஜிகா வாட்ஸ் அதாவது சுமார் 15 ஆயிரம் மெகாவாட்ஸ் மின் உற்பத்தி திறனை எட்டியுள்ளதாக அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது.
இதில் 11 ஜிகாவாட்ஸ், சூரிய மின்திட்டங்கள் வாயிலாகவும், 1.9 ஜிகாவாட்ஸ் காற்றாலை மூலமும் உற்பத்தி செய்யப்படுவதாக அதானி குழும ம் தெரிவித்துள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை இதுவே மிகவும் அதி வேகமான பசுமை மின் உற்பத்தி திட்டம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கவுதம் அதானி, இந்தியாவின் பசுமை மின் உற்பத்தியை உச்சத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற இலக்கில் இது எட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் பசுமை எரிசக்தி திட்டங்கள் வாயிலாக 50 ஆயிரம் மெகா வாட்ஸ் மின்உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : அஜித் தண்ணீர் கேட்ட போது செருப்பால் அடித்தனர்.. மக்கள் அதிர்ச்சி தகவல்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved