Also Watch
Read this
By: Manigandan Raja

தேசத் தந்தை மகாத்மா காந்தி பெயரிலான 100 நாள் வேலை திட்ட பெயரை மாற்றியதை கண்டித்து, மத்திய அரசுக்கு எதிராக ஜனவரி 5-ஆம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். 100 நாள் வேலை திட்டத்திற்கு விபி-ஜி ராம் ஜி என்று பெயர் மாற்றப்பட்டதற்கு, ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த திட்டத்தில் மகாத்மா காந்தி பெயர் நீக்கப்பட்டுள்ளதையும், திட்டத்தில் மாநில அரசின் நிதிச்சுமை பல மடங்கு அதிகரிக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved