Also Watch
Read this
Posted on: Aug 21, 2024 01:34 AM
By: Admin News Tamil

மத்திய அரசின் நேரடி நியமன முறையை ரத்து செய்தது சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்திய கூட்டணியின் எதிர்ப்புக்கு பின் நேரடி நியமன முறை ரத்து செய்யப்பட்டதாகவும், பாஜக அரசு பல்வேறு வடிவங்களில் இட ஒதுக்கீட்டை குறைக்க முயற்சிப்பதால் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஒடுக்கப்பட்டோர் உரிமைகளை பாதுகாக்க நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என குறிப்பிடுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved