Also Watch
Read this
Posted on: Aug 20, 2024 11:48 AM
By: Admin News Tamil

ஈரோடு மாவட்டம் நல்லாம்பட்டி அருகே கீழ்பவானி கால்வாயின் 47ஆவது மைல் பகுதியில் நீர் கசிவு ஏற்பட்ட பகுதியை அமைச்சர் முத்துசாமி நேரில் ஆய்வு செய்தார். கீழ்பவானி கால்வாயின் அடிப்பகுதியில் செல்லும் மழை நீர் வடிகாலில் கசிவு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருவதால் கால்வாய் உடையும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதையடுத்து மழைநீர் வடிகால் கசிவு ஏற்பட்ட இடத்தில் அமைச்சர் முத்துசாமி, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உள்ளிட்டோருடன் சென்று நேரில் ஆய்வு நடத்தினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved