Also Watch
Read this
Posted on: Aug 24, 2024 03:37 PM
By: Srini Vasan

பழனியில் நடைபெரும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர் நேரில் சென்று தொடங்கி வைத்திருக்க வேண்டும் என்றும், சிறுபான்மையினர் மாநாடு என்றால் அவர் செல்லாமல் இருந்திருப்பாரா என்றும் பாஜக நிர்வாகி தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பினார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன், தமிழகத்தில் எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் ஆன்மீகத்தை பற்றி பேசாமல் இனிமேல் அரசியல் செய்ய முடியாது என்பதை முத்தமிழ் முருகன் மாநாடு உணர்த்துவதாக தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved