திருச்சி மாவட்டம் துறையூர் அருகே சாலை விபத்தில் பலியான இளைஞர் மூளைச்சாவு அடைந்த நிலையில் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. கடந்த 11ஆம் தேதி உப்பிலியபுரம் கிராமத்தை சேர்ந்த சேதுபதி என்பவர் பைக்கிலிருந்து விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து பலியானார். அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதையடுத்து அவரது உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது