கன்னியாகுமரி மாவட்டத்தில் முன்னாள் காங்கிரஸ் மீனவரணி நிர்வாகி தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்தார். மீனவ மக்களின் வாக்குகளை ஒன்றிணைத்து வெற்றியை தலைவர் கரங்களில் ஒப்படைப்போம் என உறுதியேற்றனர்.தவெகவில் புது வரவுகாங்கிரஸ் முன்னாள் மீனவரணி அகில இந்திய செயலாளரும், முன்னாள் காங்கிரஸ் மீனவரணி மாநில தலைவருமான கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த சபீன் என்பவர் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். வெற்றியை விஜய் கரங்களில் ஒப்படைப்போம்பின்னர் கன்னியாகுமரி மத்திய மாவட்ட செயலாளர் கிருஷ்ண குமாரை சந்தித்த அவர்கள் குமரி கடற்கரை வெற்றியை மீனவ மக்களின் வாக்குகளை ஒன்றிணைத்து வெற்றியை தலைவர் விஜயின் கரங்களில் ஒப்படைப்போம் என உறுதியேற்றனர். Related Link தாயின் வங்கிக் கணக்கை முடக்கி வைத்த இந்தியன் வங்கி