Also Watch
Read this
By: Manigandan Raja

போட்டுக்கொண்டு காளைகளை அடக்கிய வீரர்கள் :
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே ராங்கியம் பெரியகண்மாயில் அழகிய நாஞ்சியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமன்றி மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, திண்டுக்கல், தேனி ,ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த 200 காளைகளும் 50மாடு பிடி வீரர்களும் பங்கேற்றுள்ளன.
இந்த ஜல்லிகட்டு போட்டி 2சுற்றுகளாக நடைபெற உள்ளது வாடிவாசலில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்க்கப்பட்ட காளைகள் துள்ளி குதித்து சீறிப் பாய்ந்து வந்ததை மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டி தழுவி வருகின்றனர்.இதனை பார்வையாளர்கள் ரசித்து வருகின்றனர்.
இந்த ஜல்லிக்கட்டில் சிறந்த முறையில் காளைகளை தழுவிய மாடுபிடி வீரர்களுக்கும் நீண்ட நேரம் வீரர்களை திணறடித்து களமாடிய காளைகளுக்கும் சில்வர் பாத்திரம் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது
காளைகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே வாடிவாசலுக்குள் அனுமதிக்கப்பட்டது.மேலும் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் சுகாதாரத்துறை கால்நடைத்துறை வருவாய்த்துறை தீயணைப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் கண்காணிப்பில் இந்த ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved