news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிர்வாகம்
tv

Also Watch

tv

Read this

கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிர்வாகம்

உதகை, நீலகிரி

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
வழிந்து ஓடும் கழிவு நீர்

நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிர்வாகம் :

நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்குட்பட்ட 29வது வார்டு பகுதியான பாப்ஷா லைன் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக இப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் இருந்து கழிவு நீர் சாலையில் வழிந்து ஓடியது.

இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதாக நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளித்திருந்தனர். ஆனால் 15 நாட்கள் ஆகியும் நகராட்சி நிர்வாகம் ஜேசிபி இயந்திரம் இல்லை என கூறி அதிகாரிகள் அலட்சியமாக பதில் கூறியதாகவும்.

குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறி இன்று நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதி நகர மன்ற உறுப்பினர் மற்றும் அப்பகுதி மக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சீரமைத்து தருவதாக கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Related Link
சேதமடைந்த சாயக்கிண்ணங்கள், கருப்பு நிற பானை

சேதமடைந்த சாயக்கிண்ணங்கள், கருப்பு நிற பானை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நிலமோசடி வழக்கில் ராபர்ட் வதேராவுக்கு முன்ஜாமீன்

1
11 mins agoshare
ராபர்ட் வதேராவுக்கு முன்ஜாமீன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved