புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே விராலூர் குரும்பச்சி அம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கோவில் முன்பு ஆடு தலை வெட்டப்பட்டு, அதனை ஊர் மக்கள் போட்டி போட்டுக் கொண்டு ஈட்டியால் குத்தும் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆட்டுத்தலை யாருடைய ஈட்டியின் மீது உள்ளதோ, அது அவர்களுக்கே வழங்கப்படுகிறது.