சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் இருவர் நிரந்தர நீதிபதிகளாக பதவி ஏற்றுக் கொண்டனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு முதல் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வந்த குமரப்பன் மற்றும் ராஜசேகர் ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது. இதனைத் தொடர்ந்து இருவரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். இந்நிலையில் தலைமை நீதிபதி ஸ்ரீராம் இருவருக்கும் பதவி பிரமானம் செய்து வைத்தார்.