Also Watch
Read this
Posted on: Nov 27, 2025 12:00 PM
By: Web Team
தஞ்சை மாவட்டம் ஆலங்குடியில், 13 வருடமாக காதலித்து வந்த காதலிக்கு வேறொருவருடன் நிச்சயதார்த்தம் ஆன ஆத்திரத்தில், அவரை கத்தியால் குத்தி படுகொலை செய்த காதலனை போலீசார் கைது செய்தனர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மகளான, தொடக்கப்பள்ளி ஆசிரியை காவியா வேறொரு சமூகத்தை சேர்ந்த அஜித்குமார் என்பவரை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. பெற்றோர் வற்புறுத்தலின் பேரில் காவியாவுக்கு நிச்சயதார்த்தம் ஆனதாக கூறப்படும் நிலையில், அதனை மறைத்து அவர் காதலனுடன் பேசி வந்ததாக தெரிகிறது. நேற்றிரவு செல்போனில் பேசிக் கொண்டிருந்த போதுதான், நிச்சயமான போட்டோவை காவியா காண்பித்த நிலையில் அஜித்குமார் வெறிச்செயலில் ஈடுபட்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved