Also Watch
Read this
By: Web Team

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மாயார் செல்லும் சாலையில் கம்பீரமாக நடந்து சென்ற புலியை, சுற்றுலா பயணிகள் சிலிர்ப்புடன் பார்த்து ரசித்தனர்.
மசினகுடியில் இருந்து மாயார் கிராமத்திற்கு செல்லும் சாலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக புலி நடமாட்டம் இருந்து வருகிறது.
அவ்வப்போது சாலையில் உலா வரும் புலியை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் ஞாயிற்றுக்கிழமை காலை மாயார் சாலையில் சென்ற சுற்றுலா பயணிகள்,
மான்கள் சத்தமிட்டதால் வாகனத்தை நிறுத்தி காத்திருந்தனர்.
அப்போது மெதுவாக வனப்பகுதியிலிருந்து வெளியே வந்த புலி, கம்பீரமாக சாலையில் நடந்து சென்று மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved