திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை அருகே ஆண்டிப்பனூர் நீர்த்தேக்கத்தில் குளிக்க சென்ற போது மாயமான இளைஞரை தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை அமைந்தகரையை சேர்ந்த விஜயகுமார் என்பவர் நண்பர்களுடன் ஆண்டிப்பனூர் நீர்த்தேக்கத்தில் குளித்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி மாயமானதாக கூறப்படுகிறது.