Also Watch
Read this
Posted on: Nov 30, 2025 10:40 AM
By: Web Team

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே சிவகளை பரும்பு கிராமத்தில் தொடர் கனமழையால் ஊறிப்போன மண் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 80 வயதான முதியவர் உயிரிழந்தார். விவசாயி பலவேசம் என்பவர் நேற்றிரவு தனது வீட்டில் கட்டிலில் படுத்துறங்கி கொண்டிருந்த போது ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது. இதனைதொடர்ந்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved