கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்த பாடில்லை என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். கடந்த 3 நாட்களாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் பயணிகள் அவதிக்குள்ளானதாக வெளியான செய்தியை சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவித்துள்ள அவர், சரியான திட்டமிடல் இல்லாமல் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளதாக சாடினார்.