Also Watch
Read this
By: Manigandan Raja

மக்கள் அவதி :
வெளி கிராமங்களில் இருந்து நாகப்பட்டினத்திற்கு வேலைக்கு வரும் பெண்கள் மற்றும் பொது மக்கள் வசதிக்காக இரவு நேரத்தில் நாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு கிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது.
குறிப்பாக ஜவுளிகடைகளில் வேலை பார்க்கும் பெண்களின் வசதிக்காக இரவு ஒன்பது மணிக்கு இயக்கப்பட்டு வந்தது. இதே போன்று நன்னிலத்திற்கு இயக்கப்பட்டு வந்த
பேருந்தை கடந்த 20 நாட்களாக நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் இரவில் வேலை முடித்து செல்ல கூடிய பெண்கள் , பொதுமக்கள் ஊருக்கு செல்லமுடியாமல் இரவு முழுவதும் பேருந்து நிலையத்திலயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு வருவதால்
மாற்று பேருந்து விட சொல்லி பேருந்து நிலையத்தில் பெண்கள், பொதுமக்கள் நடத்துனர், ஓட்டுநர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
டீசலில் இருந்து கேஸ் க்கு மாறியதால் பேருந்து இயக்கப்படவில்லை என கூறுவதால் ஒவ்வொரு நாளும் வேலை முடித்து ஊருக்கு செல்ல முடியாமல் போவதால் வீட்டில் பிரச்சனை ஏற்படுவதாக குற்றம் சாட்டிய பெண்கள் வழக்கமாக இயக்கப்பட்ட பேருந்தை வழக்கமான நேரத்திலே இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved