சார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் ஒரு கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு வந்த விமான பயணி ஒருவரின் உடைமையை சோதனை செய்தபோது, இயந்திரத்திற்குள் மறைத்து வைத்து ஒரு கிலோ 400 கிராம் தங்கத்தை கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.