சித்திரை முழு நிலவு பெருவிழாவுக்கு அனுமதி வழங்கக் கூடாது என தொடரப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே வரும் 11 ம் தேதி பாமக மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து சித்திரை முழு நிலவு பெருவிழாவை நடத்துகிறது. இந்நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க கூடாது என வடநெமிலி பஞ்சாயத்து தலைவர் பொன்னுரங்கம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி எல்.விக்டோரிய கவுரி முன்பு விசாரணைக்கு வந்த போது, 42 நிபந்தனைகள் உடன் தான் அனுமதி வழங்கப்பட்டதாக தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது. இதனை பதிவுசெய்து கொண்ட நீதிபதி, நிகழ்ச்சிக்கு ஏற்கனவே அனுமதி அளிக்கபட்டுள்ளதால் அனுமதி வழங்க கூடாது என உத்தரவிட முடியாது என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தார்.