திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மிட்டுர் பகுதியைச் சேர்ந்த கந்தன் என்பவர் தனது காரில் ஆலங்காயம் காவல் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது காரின் முன் பக்கம் பற்றிய தீ வேகமாக கார் முழுவதும் பரவியது. காவல்நிலையத்தில் இருந்த காவலர்கள் தீயணைப்புதுறைக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் காரில் பற்றிய தீயை அணைத்தனர்.