Also Watch
Read this
By: Web Team

தேனி அருகே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை தொடர்பாக திமுக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை பிடித்து விசாரித்து வரும் போலீசார், மேலும் மூவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
மார்க்கையன்கோட்டையை சேர்ந்த திமுக இளைஞரணி முன்னாள் நிர்வாகி பிரபுவுக்கும், சின்னமனூரில் பேக்கரி நடத்தி வரும் சுருளி மணி என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்னை நீடித்து வந்தது.
இந்நிலையில், சுருளி மணி தனது மைத்துநர் முத்துராஜா மற்றும் நண்பர்களுடன், வியாழக்கிழமை இரவு 11:30 மணி அளவில் பிரபுவை மார்க்கையன்ங்கோட்டை ரவுண்டானாவிற்கு அழைத்து பணப் பிரச்சனை தொடர்பாக பேசினர்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி பிரபுவை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved