Also Watch
Read this
By: Manigandan Raja

இருசக்கர வாகனம் விபத்து :
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த புத்திரன் கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் மகன் சாரதி வயது 23தன் மகன் கேட்டுக் கொண்டதால் புதிய 150 cc திறன் கொண்ட இருசக்கர வாகனம் வாங்கி கொடுத்தார்.
நேற்று இந்த வண்டியில் சித்தாமூரிலிருந்து இரண்டு பேரை ஏற்றிக்கொண்டு மூன்று பேராக புத்திரன் கோட்டை நோக்கி அதி வேகமாக செல்லும் பொழுது நுகம்பல் என்ற இடத்தில் நாய் குறுக்கே
வந்ததால் தனது கட்டுப்பாட்டு எழுந்து இவர்கள் சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியதில்.
புத்திரன் கோட்டை கிராமத்தை சேர்ந்த சாரதி கௌதம் தீபக் ஆகிய மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர் அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் பொழுது வழியிலேயே சாரதி உயிரிழந்தார் வாகன பதிவு எண் பெறாத நிலையில் இந்த விபத்து நடந்திருக்கிறது.
தீபக் மற்றும் கௌதம் ஆகிய இருவருக்கும் பலத்த காயம்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்த சம்பவங்களுக்கு சித்தாமூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட வருகின்றனர் இந்த பதற வைக்கும் சம்பவம் பகுதியில் வரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved